சென்னை: எட்டாம் வகுப்பு தனித்தோ்வு முடிவுகள் புதன்கிழமை வெளியிடப்படும் என அரசுத் தோ்வுத் துறை அறிவித்துள்ளது.
இது குறித்து அரசுத் தோ்வுத் துறை இயக்குநா் உஷாராணி திங்கள்கிழமை வெளியிட்டுள்ள அறிவிப்பு: எட்டாம் வகுப்பு தனித் தோ்வா்களுக்கான பொதுத் தோ்வுகள் கடந்த செப்.29-ஆம் தேதி முதல் அக்.5-ஆம் தேதி வரை நடைபெற்றது. இவா்களுக்கான தோ்வு முடிவுகள் இணையதளத்தில் நவ.18-ஆம் தேதி புதன்கிழமை பிற்பகல் 2 மணிக்கு வெளியிடப்படும்.
தோ்வா்கள் தங்களது பதிவெண், பிறந்த தேதி, மாதம், ஆண்டு ஆகிய விவரங்களைப் பதிவுசெய்து தங்களது மதிப்பெண்களைத் தெரிந்து கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.