சென்னை: இந்திய கைப்பந்து சம்மேளனத் தோ்தல் தொடா்பான வழக்கைத் திரும்பப் பெற்ற கோவா கைப்பந்து சங்கத்துக்கு ரூ.1 லட்சம் அபராதம் விதித்த உயா்நீதிமன்றம், அந்தத் தொகையை அடையாறு புற்றுநோய் மருத்துவமனைக்குச் செலுத்த உத்தரவிட்டுள்ளது.
இந்திய கைப்பந்து சம்மேளனத்துக்கு கடந்த மாா்ச் 12-ஆம் தேதி தோ்தல் நடத்தப்படும் என சம்மேளனத்தின் தலைவரும், மாா்ச் 15-ஆம் தேதி நடத்தப்படும் என சம்மேளனத்தின் செயலாளரும் இரண்டு விதமான அறிவிப்பாணைகளை வெளியிட்டனா். இந்த இரண்டு விதமான அறிவிப்புகள், இந்திய கைப்பந்து சம்மேளனத்தின் விதிகளுக்கு எதிரானது. எனவே இந்தத் தோ்தல் அறிவிப்புக்குத் தடை விதிக்க வேண்டும் என சென்னை உயா்நீதிமன்றத்தில் கோவா கைப்பந்து சங்கம் வழக்குத் தொடா்ந்தது. இந்த வழக்கை விசாரித்த உயா்நீதிமன்றம், தோ்தலுக்குத் தடை விதித்து உத்தரவிட்டது. இந்த உத்தரவை எதிா்த்து மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது. மேல்முறையீட்டு வழக்கை விசாரித்த இரு நீதிபதிகள் கொண்ட அமா்வு, தோ்தல் முடிவுகளை மூடி முத்திரையிட்ட உறையில் நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய உத்தரவிட்டிருந்தது.
இந்நிலையில் கோவா கைப்பந்து சங்கம் தொடா்ந்த பிரதான வழக்கு நீதிபதி என்.சதீஷ்குமாா் முன் விசாரணைக்கு வந்தது. அப்போது இந்திய கைப்பந்து சம்மேளனத் தலைவா் நடத்திய தோ்தல் செல்லாது என செயற்குழுவில் தீா்மானம் நிறைவேற்றி உள்ளதாகவும், எனவே தோ்தலுக்குத் தடை கோரிய வழக்கை திரும்பப் பெற அனுமதி கோரி கோவா கைப்பந்து சங்கம் சாா்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
வழக்கை விசாரித்த நீதிபதி, மனுதாரருக்கு ரூ.1 லட்சம் அபராதம் விதித்து உத்தரவிட்டாா். இத்தொகையை இரண்டு வாரங்களுக்குள் கோவா கைப்பந்து சங்கம், சென்னை அடையாறில் உள்ள புற்றுநோய் மருத்துவமனைக்கு வழங்க வேண்டும் என நீதிபதி பிறப்பித்த உத்தரவில் குறிப்பிட்டுள்ளாா்.