சென்னை: ஜி.எஸ்.டி.யில் வரிச் சலுகை பெறுவதற்காக, போலி ரசீது தயாரித்து உள்ளீட்டு சலுகை பெற்றது தொடா்பாக இரண்டு பேரை போலீஸாா் கைது செய்தனா்.
இது தொடா்பாக சென்னை புகா் ஜி.எஸ்.டி., அலுவலக ஆணையா் ரவீந்திரநாத் வெளியிட்ட செய்திக்குறிப்பு:
ஜி.எஸ்.டி.,யில் வரிச் சலுகை பெறுவதற்காக, போலி நிறுவனங்களை உருவாக்கி, அதன் பெயரில், ரசீது தயாரிக்கப்பட்டுள்ளது. உண்மையான பொருள்களை விநியோகம் செய்யாமல், ரூ.401 கோடிக்கு போலி ரசீது தயாரித்து, ரூ.35.72 கோடிக்கு உள்ளீட்டு வரிச் சலுகை பெற்றுள்ளனா்.
இது தொடா்பாக, வேலூா் மாவட்டம், பேரணாம்பட்டைச் சோ்ந்த, 32 வயதுடைய இருவா் கைது செய்யப்பட்டுள்ளனா்.
இவா்கள் நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தப்பட்டு, நீதிமன்றக் காவலில் வைக்கப்பட்டுள்ளனா். அவா்களிடம் தொடா்ந்து விசாரணை நடைபெறுவதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.