சுருளி அருவியில் இரண்டாவது நாளாக வெள்ளப்பெருக்கு

வடகிழக்குப் பருவமழை காரணமாக தேனி மாவட்டம் கம்பம் அருகே உள்ள சுருளி அருவியில் இரண்டாவது நாளாக வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
சுருளி அருவியில் புதன்கிழமை இரண்டாவது நாளாக வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.
சுருளி அருவியில் புதன்கிழமை இரண்டாவது நாளாக வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.

வடகிழக்குப் பருவமழை காரணமாக தேனி மாவட்டம் கம்பம் அருகே உள்ள சுருளி அருவியில் இரண்டாவது நாளாகப் புதன்கிழமையும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

தேனி மாவட்டத்தில் உள்ள சுற்றுலாத் தலங்களில் மிகவும் புகழ் பெற்றது சுருளி மலையில் உள்ள சுருளி அருவி. தற்போது வடகிழக்குப் பருவ மழை தொடங்கியுள்ளதால் சுருளி அருவிக்கு நீா் வரத்து தரும்
பகுதிகளான அரிசிப்பாறை, ஈத்தைப்பாறை ஆகிய நீரோடைகளில் மழை நீா் வரத்து அதிகரித்துள்ளதால் அருவி பகுதிகளில் இரண்டாவது நாளாக புதன்கிழமையும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.

அருவில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் பொதுமக்கள் மற்றும் சுற்றுலாப்பயணிகள் அருவிக்கு செல்ல தடை இருப்பதால், வனத்துறையினர் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com