பிற மாநில மாணவர்கள் தமிழக தரவரிசைப் பட்டியலில் இடம்பெற்றது எப்படி? ஸ்டாலின்

பிற மாநில தரவரிசைப் பட்டியலில் இடம்பெற்றுள்ள மாணவர்களின் பெயர்கள் தமிழ்நாட்டு தரவரிசைப்  பட்டியலிலும் இடம்பெற்றது எப்படி? என்று திமுக தலைவர் ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார்.
பிற மாநில மாணவர்கள் தமிழக தரவரிசைப் பட்டியலில் இடம்பெற்றது எப்படி? ஸ்டாலின்
பிற மாநில மாணவர்கள் தமிழக தரவரிசைப் பட்டியலில் இடம்பெற்றது எப்படி? ஸ்டாலின்

பிற மாநில தரவரிசைப் பட்டியலில் இடம்பெற்றுள்ள மாணவர்களின் பெயர்கள் தமிழ்நாட்டு தரவரிசைப்  பட்டியலிலும் இடம்பெற்றது எப்படி? என்று திமுக தலைவர் ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார்.

இது குறித்து ஸ்டாலின் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், பிற மாநில தரவரிசைப் பட்டியலில் இடம்பெற்றுள்ள மாணவர்களின் பெயர்கள் தமிழ்நாட்டு தரவரிசைப் பட்டியலிலும் இடம்பெற்றது எப்படி? இந்த மோசடிகளின் பின்னணி என்ன? தரவரிசைப் பட்டியலை உடனடியாக மாற்றி வெளியிட வேண்டும்" 

"மருத்துவ கலந்தாய்வை இணையவழி மூலம் நடத்தாத அ.தி.மு.க. அரசு, நேரடிக் கலந்தாய்வில் பங்கேற்கும் மாணவர்கள் - பெற்றோர் பாதுகாப்பைக் கவனத்தில் கொள்ள வேண்டும்; 7.5% முன்னுரிமை இடஒதுக்கீட்டில் முறைகேடுகளுக்கு இடமளித்துவிடாமல் நேர்மையாக நடத்த முதல்வர் பழனிசாமி நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று வலியுறுத்தியுள்ளார்.

மேலும் அந்த அறிக்கையில் ஸ்டாலின் கூறியிருப்பதாவது, அரசுப் பள்ளி மாணவர்களுக்கான 7.5 சதவீத முன்னுரிமை இட ஒதுக்கீட்டிற்குரிய கலந்தாய்வு தொடங்கும் நாளில், மருத்துவக் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கைக்காக தரவரிசைப் பட்டியலை அரசு வெளியிட்டுள்ளது.  

அந்தப் பட்டியலில், வெளிமாநில மாணவர்களும் இடம்பெற்றிருப்பது அதிர்ச்சியையும், ஆழ்ந்த வேதனையையும் ஏற்படுத்தியுள்ளது. ‘நீட்’  தேர்வால் தமிழக மாணவர்களின் கனவு ஒவ்வொரு ஆண்டும் சிதைக்கப்பட்டு வருகிறது. இதனால் 13 மாணவர்கள் இதுவரை தற்கொலை செய்து கொண்டு தங்கள் உயிரை மாய்த்துக் கொண்டிருக்கிறார்கள். 

2020-21-ஆம் ஆண்டு எம்.பி.பி.எஸ் மற்றும் பி.டி.எஸ் படிப்பிற்கான அரசு ஒதுக்கீடு பட்டியலில், முதல் 10 மாணவர்களில் இரண்டாம் இடம் பிடித்துள்ள மாணவி, கேரள மாநில மருத்துவ தரவரிசைப் பட்டியலில் 5-ஆம் இடத்தில் இருக்கிறார். தமிழ்நாட்டில் வெளியிடப்பட்டுள்ள தரவரிசைப் பட்டியலில் இடம் பெற்றுள்ள 7 பேரின் நீட் பதிவு எண்கள், தெலங்கானா தரவரிசைப் பட்டியலிலும் உள்ளன. இன்னும் தொடருகிறது தரவரிசைப் பட்டியல் முறைகேடுகளும், முன்னுக்குப்பின் முரண்பாடுகளும்!

ஒரே மாணவர் எப்படி இரு மாநிலங்களின் ரேங்க் பட்டியலில் இடம்பெற முடியும்?. அப்படியென்றால், அந்த மாணவர் ஒவ்வொரு மாநிலத்திற்கும் தனித்தனியாக எப்படி இருப்பிடச் சான்றிதழ் பெற்றார்? தெலங்கானா, ஆந்திரம், கேரள மாநிலங்களின் தரவரிசைப் பட்டியலில் இடம் பெற்றவர்கள் தமிழகத்தில் வெளியிடப்பட்டுள்ள தரவரிசைப்  பட்டியலில் எப்படி இடம் பெற்றார்கள்? அப்படி இடம்பெற்றவர்கள் எப்படி தமிழகத்தில் இருப்பிடச் சான்றிதழ் பெற்றார்கள்? 

ஆகவே 2020-2021-ஆம் ஆண்டிற்கான எம்.பி.பி.எஸ் - பி.டி.எஸ் கல்வியில் சேருவதற்கான நீட் தரவரிசைப்  பட்டியலில் உள்ள முறைகேடுகள் உடனடியாக சரி செய்யப்பட்டு, தமிழக மாணவர்கள் மருத்துவக் கல்லூரிகளில் சேருவதை அரசு உறுதி செய்ய வேண்டும். வேறு மாநிலங்களின் தரவரிசைப் பட்டியலில் இடம்பிடித்துள்ளவர்களை நீக்கம் செய்வதோடு; அவர்கள் எப்படி தமிழக தரவரிசைப் பட்டியலில் நுழைந்தார்கள், யார் யார் அதற்கு உடந்தை என்பது குறித்து விசாரணை நடத்தப்பட வேண்டும் என்றும் ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com