தேசிய பச்சிளங் குழந்தைகள் வார விழிப்புணர்வு முகாம்

சேலம் மாவட்டம் பேளூர் வட்டார சுகாதார நிலையத்தின் சார்பில், துக்கியாம்பாளையம் துணை சுகாதார நிலையத்தில் தேசிய பச்சிளம் குழந்தைகள் வார விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது.
வாழப்பாடி அருகே துக்கியாம் பாளையத்தில் நடைபெற்ற தேசிய பச்சிளம் குழந்தைகள் வார விழிப்புணர்வு முகாம்.
வாழப்பாடி அருகே துக்கியாம் பாளையத்தில் நடைபெற்ற தேசிய பச்சிளம் குழந்தைகள் வார விழிப்புணர்வு முகாம்.

சேலம் மாவட்டம் பேளூர் வட்டார சுகாதார நிலையத்தின் சார்பில், துக்கியாம்பாளையம் துணை சுகாதார நிலையத்தில் தேசிய பச்சிளம் குழந்தைகள் வார விழிப்புணர்வு முகாம் புதன்கிழமை நடைபெற்றது.

ஆண்டுதோறும் நவம்பர் 15 முதல் 21 வரை தேசிய பச்சிளம் குழந்தைகள் விழிப்புணர்வு வாரமாகக் கடைப்பிடிக்கப்படுகிறது. சேலம் மாவட்டம் பேளூர் வட்டாரத்தில், அனைத்து துணை சுகாதார நிலையங்களிலும் தேசிய பச்சிளம் குழந்தைகள் வார விழிப்புணர்வு முகாம் புதன்கிழமை நடைபெற்றது. 

ஊட்டச்சத்து கண்காட்சி
ஊட்டச்சத்து கண்காட்சி

துக்கியாம்பாளையம் துணை சுகாதார நிலையத்தில் நடைபெற்ற முகாமிற்கு வட்டார மருத்துவ அலுவலர் சி.பொன்னம்பலம் தலைமை வகித்தார். நடமாடும் மருத்துவக் குழு மருத்துவ அலுவலர் பேரின்பம், சமுதாய சுகாதார செவிலியர் ராணி ஆகியோர், கர்ப்பிணிகளுக்கும் பிரசவித்த தாய்மார்களுக்கும், பச்சிளங்குழந்தைகள் பராமரிப்பு, தடுப்பூசிகள் குறித்த விழிப்புணர்வு, குழந்தைகளுக்கான சத்துணவுகள், எடை குறைவான குழந்தைகள் பராமரிப்பு, பச்சிளங்குழந்தைகளின் நோய்கள் தடுப்பு குறித்து விளக்கினர். 

அங்கன்வாடி பணியாளர்கள் ராஜேஸ்வரி, சந்திரகுமாரி ஆகியோர், கர்ப்பிணி தாய்மார்கள், குழந்தைகளுக்கான ஊட்டச்சத்து  கண்காட்சி அமைத்து விளக்கமளித்தனர். முகாமில் பங்கேற்ற தாய்மார்களுக்கு,   சத்துமாவு உருண்டைகள், பதார்த்தங்கள் மற்றும் ஊட்டச்சத்து கஞ்சி வழங்கப்பட்டது. நிறைவாகக் கிராம சுகாதார செவிலியர் செல்வி நன்றி கூறினார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com