சீர்காழியில் மாற்றுத்திறனாளிகள் ஆர்ப்பாட்டம் 

நாகப்பட்டினம் மாவட்டம் சீர்காழி வட்டாட்சியர் அலுவலகம் முன்பு மாற்றுத்திறனாளிகள் மூன்று அம்ச கோரிக்கைகளை வலியுறுத்திக் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். 
சீர்காழியில் மாற்றுத்திறனாளிகள் ஆர்ப்பாட்டம் 
சீர்காழியில் மாற்றுத்திறனாளிகள் ஆர்ப்பாட்டம் 

நாகப்பட்டினம் மாவட்டம் சீர்காழி வட்டாட்சியர் அலுவலகம் முன்பு மாற்றுத்திறனாளிகள் மூன்று அம்ச கோரிக்கைகளை வலியுறுத்திக் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். 

மாத உதவித்தொகை குறைந்தபட்சம் ரூ.3000, கடும் ஊனமுற்றோருக்கு ரூ.5000 உயர்த்தி வழங்க வேண்டும், தனியார் வேலைகளில் இட ஒதுக்கீடு வழங்க தமிழக அரசு சிறப்புச் சட்டம் இயற்ற வேண்டும், அரசுத்துறையில் பின்னடைவு காலிப் பணியிடங்களைக் கண்டறிந்து 3 மாதங்களில் நிரப்ப 2013 உச்சநீதிமன்றம் தீர்ப்பை வெளிப்படையாக அறிவித்து உடனடியாக செய்யப்பட வேண்டும் என்பன உள்ளிட்ட மூன்று அம்ச கோரிக்கையை வலியுறுத்தி மாற்றுத்திறனாளிகள் வட்டாட்சியர் அலுவலகம் எதிரே கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். 

இதில் சீர்காழி தாலுகா முழுவதும் உள்ள மாற்றுத் திறனாளிகள் கலந்து கொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com