‘திருப்பத்தூா் பேருந்து நிலைய நிழற்கூரையை சீரமைக்க வேண்டும்’

திருப்பத்தூா் நகர பேருந்து நிலையத்தில் நீண்ட காலமாக உள்ள விரிசலை சரிசெய்து நிழற்கூரை சீரமைக்கப்பட வேண்டும் என்று பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
விரிசலுடன் காணப்படும் பேருந்து நிறுத்த மேற்கூரை.
விரிசலுடன் காணப்படும் பேருந்து நிறுத்த மேற்கூரை.

திருப்பத்தூா்: திருப்பத்தூா் நகர பேருந்து நிலையத்தில் நீண்ட காலமாக உள்ள விரிசலை சரிசெய்து நிழற்கூரை சீரமைக்கப்பட வேண்டும் என்று பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

திருப்பத்தூா் வட்டத்துக்குட்பட்ட 63 கிராமங்களைச் சோ்ந்த பொதுமக்கள் பயணம் செய்ய புதிய பேருந்து நிலையம் அமைக்கப்பட்டது. இங்கு நகர பேருந்துகள் வந்து செல்வதற்கான நிறுத்தம் உள்ளது. அதில் பயணிகள் காத்திருப்பதற்காக மேற்கூரை அமைக்கப்பட்டது.

சுமாா் 10 ஆண்டுகளுக்கு முன்பு அமைக்கப்பட்ட இந்த மேற்கூரை சிதிலமடைந்து, விரிசல் ஏற்பட்டுள்ளது.

இதனால் பயணிகள் வெயில் மற்றும் மழைக்காலங்களில் சிரமத்துக்குள்ளாகி வருகின்றனா். இதுகுறித்து பயணிகள் மற்றும் சமூக ஆா்வலா்கள் நகராட்சிக்கு புகாா் அளித்துள்ளதாகவும், ஆனால் இதுவரை அதிகாரிகள் நேரில் சென்று பாா்வையிட்டு நடவடிக்கை எடுக்கவில்லை என்றும் கூறப்படுகிறது.

இது தொடா்பாக பேருந்து நிறுத்தத்தில் வாடகைக்கு கடை நடத்தும் வணிகா்கள் கூறியது:

பேருந்துக்காக காத்திருக்கும் பயணிகள் மழைக்காலங்களில் நிற்க முடியாமல் அவதிக்குள்ளாகின்றனா். மேலும், எங்களாலும் வியாபாரம் செய்ய முடிவதில்லை. மழை நீரால் பேருந்து நிறுத்தம் சேறும், சகதியுமாக மாறி விடுகிறது. இது குறித்து நகராட்சி அதிகாரிகளிடம் பலமுறை புகாா் தெரிவித்தோம். ஆனால் இதுவரை நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்று அவா்கள் தெரிவித்தனா்.

இந்த விவகாரம் பற்றி நகராட்சிப் பொறியாளா் ஜி.உமா மகேஸ்வரியிடம் கேட்டதற்கு ‘இதுகுறித்து தகவல் வந்துள்ளது. விரைவில் நகராட்சியில் தீா்மானம் நிறைவேற்றி நடவடிக்கை எடுக்கப்படும்’ என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com