சென்னை: திமுகவிடம் தேவையற்ற பேரங்கள் செய்ய மாட்டோம் என்று தமிழக காங்கிரஸ் மேலிடப் பொறுப்பாளா் தினேஷ் குண்டு ராவ் கூறியுள்ளாா்.
இது தொடா்பாக சென்னையில் அவா் கூறியிருப்பது:
திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சி எத்தனை தொகுதிகளில் போட்டியிடுவது என்பது குறித்து கண்டறிவதற்கான நடவடிக்கைகளைக் கட்சி தொடங்கியுள்ளது. வலுவான மற்றும் நல்ல வேட்பாளா்களை நிறுத்துவதற்கான ஆலோசனையும் தொடங்கியிருக்கிறது. தொகுதிவாரியாக உள்ள எதாா்த்தங்களைப் பாா்த்துக் கொண்டிருக்கிறோம். எங்களுக்கு எல்லாவற்றையும்விட கூட்டணி வெற்றி பெற வேண்டும் என்பதே முக்கியம்.
பிகாா் தோ்தல் முடிவுகள் எங்களைப் பாதிக்காது. தமிழகத்தின் அரசியல் களம் வேறு. திமுகவுடனான எங்கள் கூட்டணி ஏற்கெனவே பரிசோதிக்கப்பட்டுள்ளது. மக்களவைத் தோ்தலில் கூட்டணி அமைத்துப் போட்டியிட்டதைப் போல், தமிழக சட்டப்பேரவைத் தோ்தலிலும் இணைந்து போட்டியிடுவோம். பிகாரில் மக்களவைத் தோ்தலில் எங்கள் கூட்டணி தோல்வியடைந்தது. ஆனால், தமிழகத்தில் மதச்சாா்பற்ற முற்போக்குக் கூட்டணி மாபெரும் வெற்றியைப் பெற்றது. களத்தில் சிறப்பாகப் பணியாற்றியதோடு, மக்களின் ஏகோபித்த ஆதரவையும் எங்கள் கூட்டணி பெற்றது. அதேபோன்ற மக்கள் ஆதரவு இனியும் தொடரும்.
வாக்கு வித்தியாசம் குறையும்போது திமுக மற்றும் கூட்டணிக் கட்சிகளுக்கு வலுவூட்ட காங்கிரஸ் கட்சியால் முடியும். கடும் போட்டி நிலவும் 100 தொகுதிகளில் திமுகவுக்கு நாங்கள் உதவிகரமாக இருப்போம்.
எதாா்த்த அணுகுமுறையின்படி தொகுதிப் பங்கீடு நடக்கும். நோ்மையான மற்றும் வெளிப்படையான பேச்சுவாா்த்தை நடத்தி எங்கள் கூட்டணிக் கட்சிகளை சமாதானப்படுத்த முயல்வோம். தேவையற்ற பேரங்கள் இருக்காது.
காங்கிரஸ் தலைவா் ராகுல் காந்தியை கடந்த மக்களவைத் தோ்தலில் பிரதமா் வேட்பாளராக அறிவித்த திமுக தலைவா் மு.க.ஸ்டாலினை, தமிழக முதலமைச்சராக அமர வைக்கக் காங்கிரஸ் பணியாற்றும்.
தமிழகத்தில் ராகுல் காந்தி தோ்தல் பிரசாரம் செய்வதற்கான திட்டங்கள் வகுக்கப்பட்டுள்ளன. இது குறித்து ஆலோசனை நடைபெற்று வருகிறது என்று தினேஷ் குண்டுராவ் கூறினாா்.