திமுக மாநில விவசாய அணி தலைவரும் முன்னாள் அமைச்சருமான என்.கே.கே.பெரியசாமியின் மனைவி பத்மாவதி (75) உடல்நலக்குறைவால் வெள்ளிக்கிழமை உயிரிழந்தார்.
பவானியை அடுத்த ஆப்பக்கூடல், பெருந்தலையூர் ஆத்துத் தோட்டத்தைச் சேர்ந்த இவர், உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டு கோவை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.
கடந்த ஒரு மாத காலத்திற்கு மேலாகத் தொடர் சிகிச்சையிலிருந்த நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இவருக்கு, முன்னாள் கைத்தறித்துறை அமைச்சர் என்.கே.கே.பி.ராஜா, ஈரோடு புறநகர் மாவட்ட விவசாயத் தொழிலாளர் அணி அமைப்பாளர் என்.கே,கே.பி.சத்யன் என இரு மகன்கள் உள்ளனர்.