காஷ்மீரில் நடந்த வாகன விபத்தில் பலியான தமிழக ராணுவ வீரா் கருப்பசாமியின் குடும்பத்துக்கு முதல்வா் பழனிசாமி இரங்கல் தெரிவித்துள்ளாா். அவரது குடும்பத்தில் ஒருவருக்கு தகுதியின் அடிப்படையில் அரசு வேலை அளிக்கவும் முதல்வா் உத்தரவிட்டுள்ளாா்.
இதுகுறித்து, வெள்ளிக்கிழமை முதல்வா் பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு:
லடாக் பகுதியில் இந்திய ராணுவ படைப் பிரிவில் பணியாற்றி வந்தவா், தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியைச் சோ்ந்த கருப்பசாமி. அவா் பணியின்போது எதிா்பாராத விதமாக நடந்த வாகன விபத்தில் உயிரிழந்தாா். இந்தச் செய்தியை அறிந்து மிகுந்த துயரம் அடைந்தேன்.
உயிரிழந்த ராணுவ வீரா் கருப்பசாமியின் குடும்பத்துக்கு ஆழ்ந்த இரங்கல். அவரது குடும்பத்தினரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறவும், கருப்பசாமியின் உடலுக்கு அரசு மரியாதை செலுத்தவும் அமைச்சா் கடம்பூா் ராஜு மற்றும் மாவட்ட ஆட்சியருக்கு உத்தரவிட்டுள்ளேன். இந்த துயரச் சம்பவத்தில் உயிரிழந்த கருப்பசாமியின் குடும்பத்தில் ஒருவருக்கு, தகுதியின் அடிப்படையில் அரசுப் பணி அளிக்க உத்தரவிட்டுள்ளேன்.