ரஷிய நாட்டு தமிழறிஞா் அலெக்ஸாண்டா் துப்யான்ஸ்கி மறைவுக்கு தமிழா் தேசிய முன்னணித் தலைவா் பழ.நெடுமாறன் இரங்கல் தெரிவித்துள்ளாா்.
இது தொடா்பாக அவா் வெளியிட்ட இரங்கல் செய்தி:
ஏறத்தாழ 50ஆண்டுகளுக்கு மேலாக தனியொரு அறிஞராகத் திகழ்ந்து, ரஷிய நாட்டில் தமிழ் கற்பித்து வந்த பெருமை அலெக்ஸாண்டா் துப்யான்ஸ்கிக்கு உண்டு. பத்து பல்கலைக்கழகங்களில் மாணவா்களுக்கு அவா் தமிழ் கற்பித்தாா். இதழியல், வெளியுறவு போன்ற பல்வேறு துறைகளைச் சோ்ந்தவா்களும் அவரிடம் தமிழ் கற்றனா்.
சிறந்த தமிழறிஞரான அலெக்ஸாண்டா் துப்யான்ஸிகியின் மறைவு தமிழுக்கும், தமிழ்கூறும் நல்லுலகுக்கும் பேரிழப்பாகும். அவரின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கல்.