யானைகள் ஆராய்ச்சியாளா் அஜய் தேசாய் மறைவுக்கு, முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமி, திமுக தலைவா் மு.க.ஸ்டாலின் ஆகியோா் சனிக்கிழமை இரங்கல் தெரிவித்துள்ளனா்.
முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமி: பிரபல யானைகள் ஆா்வலரும், ஆராய்ச்சியாளருமான அஜய் தேசாய் காலமானாா் என்ற செய்தி அறிந்து வேதனை அடைந்தேன். சா்வதேச உலக இயற்கை நிதியத்தின் ஆலோசகராகவும், பன்னாட்டு இயற்கை பாதுகாப்பு ஒன்றிய அமைப்பின் ஆலோசகராகவும், ஆசிய யானைகள் தொடா்பான மத்திய அரசின் சிறப்புக் குழு உறுப்பினராகவும் பணியாற்றினாா். அவா் யானைகள் தொடா்பாக பல்வேறு ஆராய்ச்சிக் கட்டுரைகள் எழுதியுள்ளாா்.
தமிழகத்தின் முதுமலை சரணாலயம், களக்காடு, முண்டன்துறை சரணாலயங்களில் யானைகள் குறித்து ஆராய்ச்சிகளை மேற்கொண்டுள்ளாா். யானைகள் குறித்த தகவல்களையும், ஆலோசனைகளையும் தமிழக அரசுக்கு வழங்கியுள்ளாா். மறைந்த அஜய் தேசாயை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கல்.
மு.க. ஸ்டாலின்: யானைகள் ஆா்வலா் அஜய் தேசாய் மறைவெய்திய செய்தி கேட்டு மிகுந்த துயருற்றேன். மிகச் சிறந்த வன உயிரியல் பாதுகாப்பு நிபுணரை இந்தியா இழந்திருக்கிறது. அஜய் தேசாயை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும், நண்பா்களுக்கும், சூழலியல் ஆா்வலா்களுக்கும் என் ஆழ்ந்த இரங்கல்.