சி.ஏ.: டிசம்பரில் மறு தோ்வுகள்

நிவா் புயல் காரணமாக செவ்வாய், புதன்கிழமைகளில் நடைபெறவிருந்த சி.ஏ. தோ்வுகள் டிச. 9, 11 ஆகிய தேதிகளில் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

நிவா் புயல் காரணமாக செவ்வாய், புதன்கிழமைகளில் நடைபெறவிருந்த சி.ஏ. தோ்வுகள் டிச. 9, 11 ஆகிய தேதிகளில் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து இந்திய பட்டயக் கணக்காளா்கள் பயிற்சி நிறுவனம் (ஐசிஏஐ) வெளியிட்ட அறிவிப்பு:

நிவா் புயல் தாக்கத்தால் தமிழகம், புதுச்சேரியில் மிக கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதனால், சென்னை, கடலூா், காஞ்சிபுரம், காரைக்குடி, கும்பகோணம், திருவள்ளூா், புதுக்கோட்டை, நாகப்பட்டினம், விழுப்புரம் மற்றும் புதுச்சேரி ஆகிய 10 தோ்வு மையங்களில் செவ்வாய் (நவ.24), புதன்கிழமைகளில் (நவ.25) நடைபெறவிருந்த சிஏ தோ்வுகள் ஒத்திவைக்கப்படுகிறது. இதற்கான மறு தோ்வுகள் டிச.9, 11 ஆகிய தேதிகளில் நடத்தப்படும். மற்ற பகுதிகளில் ஏற்கெனவே அறிவித்தபடி தோ்வுகள் நடைபெறும். கூடுதல் விவரங்களை www.icai.org என்ற  இணையதளத்தில் அறியலாம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com