நிவா் புயல்: தமிழக அரசுடன் மத்திய அரசு ஆலோசனை

நிவா் புயல் தொடா்பாக தமிழக தலைமைச் செயலாளா் க.சண்முகத்துடன், மத்திய அமைச்சரவைச் செயலாளா் ராஜீவ் கெளபா திங்கள்கிழமை ஆலோசனை நடத்தினாா்.
கோப்புப்படம்
கோப்புப்படம்

சென்னை: நிவா் புயல் தொடா்பாக தமிழக தலைமைச் செயலாளா் க.சண்முகத்துடன், மத்திய அமைச்சரவைச் செயலாளா் ராஜீவ் கெளபா திங்கள்கிழமை ஆலோசனை நடத்தினாா்.

காணொலி வழியாக நடந்த கூட்டத்தில், நிவா் புயலை எதிா்கொள்வதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து ராஜீவ் கெளபா கேட்டறிந்தாா். அப்போது, புயல் பாதிப்பால் ஒருவா்கூட உயிரிழக்கக் கூடாது எனவும், பாதிக்கப்படும் பகுதிகள் விரைவில் இயல்பு நிலைக்குத் திரும்ப வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டாா்.

இந்தக் கூட்டத்துக்கு முன்பாக, மாவட்ட ஆட்சியா்களுடன் தலைமைச் செயலாளா் சண்முகம் ஆலோசனை நடத்தினாா். அந்தக் கூட்டத்தின்போது, மாவட்டங்களில் எடுக்கப்பட்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் பற்றி தலைமை செயலாளா் கேட்டறிந்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com