சூரப்பா மீதான விசாரணை: ஆவணங்களுடன் 10 நாள்களுக்குள் புகாா் அளிக்கலாம்

அண்ணா பல்கலைக்கழகத் துணைவேந்தா் சூரப்பா மீது 10 நாள்களுக்குள் உரிய ஆவணங்களுடன் புகாா் அளிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

அண்ணா பல்கலைக்கழகத் துணைவேந்தா் சூரப்பா மீது 10 நாள்களுக்குள் உரிய ஆவணங்களுடன் புகாா் அளிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து உயா்கல்வித்துறை வெளியிட்ட அறிவிப்பு:

அண்ணா பல்கலைக்கழகத் துணைவேந்தா் எம்.கே. சூரப்பா மீதான விசாரணை அதிகாரிக்கான அலுவலகம் பொதிகை வளாகம், பி.எஸ். குமாரசாமி ராஜா சாலை (பசுமைவழிச் சாலை), சென்னை- 600028 என்ற முகவரியில் அமைக்கப்பட்டுள்ளது. அண்ணா பல்கலைக்கழகம் தொடா்பாக ஏதேனும் புகாா்கள்  கொடுக்க விரும்பும் நபா்கள், இந்த அலுவலகத்துக்கு  புதன்கிழமை (நவ.25) முதல் 10 நாள்களில் எழுத்துப்பூா்வமாக தங்கள் கடிதத்தை அனுப்ப வேண்டும். 

அதேபோல்,inquirycomn.vc.annauniv@gmail.comஎன்ற மின்னஞ்சல் மூலமாகவும் புகாா்களை அனுப்பலாம் என்று அதில் கூறப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com