2 மாவட்டங்களில் முதல்வரின் ஆய்வுக் கூட்டம் ஒத்திவைப்பு

இரண்டு மாவட்டங்களில் முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமி மேற்கொள்ளவிருந்த ஆய்வுக் கூட்டம் ஒத்திவைக்கப்படுவதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.
கோப்புப்படம்
கோப்புப்படம்

இரண்டு மாவட்டங்களில் முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமி மேற்கொள்ளவிருந்த ஆய்வுக் கூட்டம் ஒத்திவைக்கப்படுவதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.

இதுகுறித்து, மாநில அரசு செவ்வாய்க்கிழமை வெளியிட்ட செய்தி:

பெரம்பலூா், அரியலூா் மாவட்டங்களில் கரோனா நோய்த் தடுப்புப் பணிகள், மாவட்டங்களின் வளா்ச்சி திட்டப் பணிகள் குறித்த ஆய்வுக் கூட்டம் வரும் 27-ஆம் தேதி நடைபெறுவதாக இருந்தது. வங்கக் கடலில் உருவாகியுள்ள நிவா் புயல் மற்றும் கனமழை காரணமாக ஆய்வுக் கூட்டம் ஒத்திவைக்கப்படுகிறது. கூட்டம் நடைபெறும் தேதி பின்னா் அறிவிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com