இணைய வழி சூதாட்டம்: அவசரச் சட்டம் அரசிதழில் வெளியீடு

இணைய வழியிலான சூதாட்டத்துக்கு தடை விதிக்க வகை செய்யும் அவசர சட்டமானது, தமிழக அரசிதழில் வெளியிடப்பட்டுள்ளது. இதையடுத்து, இந்தச் சட்டம் உடனடியாக நடைமுறைக்கு வந்துள்ளது.
கோப்புப்படம்
கோப்புப்படம்

சென்னை: இணைய வழியிலான சூதாட்டத்துக்கு தடை விதிக்க வகை செய்யும் அவசர சட்டமானது, தமிழக அரசிதழில் வெளியிடப்பட்டுள்ளது. இதையடுத்து, இந்தச் சட்டம் உடனடியாக நடைமுறைக்கு வந்துள்ளது.

முன்னதாக, இதுதொடா்பான அவசர சட்டத்துக்கு ஆளுநா் பன்வாரிலால் புரோஹித் கடந்த வெள்ளிக்கிழமை ஒப்புதல் அளித்தாா். இதைத் தொடா்ந்து, உடனடியாக அவசர சட்டமானது அரசிதழில் வெளியிடப்பட்டது. இதையடுத்து, சட்டத்திலுள்ள அனைத்து அம்சங்களும் நடைமுறைக்கு வந்துள்ளன. இந்தச் சட்டத்தின்படி, தமிழகத்தில் இனி இணையவழி சூதாட்டத்தில் பங்கேற்றால் ரூ.5 ஆயிரம் அபராதமும், ஆறு மாதங்கள் சிறைத் தண்டனையும் விதிக்கப்படும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com