நிவர் புயல் எதிரொலியாக சென்னையை அடுத்த மாமல்லபுரத்தில் பலத்த காற்று வீசப்பட்டு வருகிறது.
வங்கக் கடலில் நிலை கொண்டுள்ள நிவர் புயர் 11 கி.மீ. வேகத்தில் நகர்ந்து வருவதாக வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. புதன்கிழமை நள்ளிரவு, வியாழக்கிழமை அதிகாலை அதிதீவிரப் புயலாக நிவர் கரையைக் கடக்கவுள்ளது. மாமல்லபுரம் - காரைக்கால் இடையே புதுச்சேரி அருகே கரையைக் கடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதன் எதிரொலியாக மாமல்லபுரத்தில் தற்போது பலத்த காற்று வீசி வருகிறது. கடல் அலைகளும் ராட்சத அலைகளாகக் காட்சியளிக்கின்றன.
விடியோ: