கரோனா பாதிப்பு நிலவரம் தொடா்பாக, மருத்துவ நிபுணா்கள், மாவட்ட ஆட்சியா்களுடன் வரும் 28-ஆம் தேதி ஆலோசனை நடைபெறும் என்று முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமி தெரிவித்தாா்.
சென்னை எழிலகத்தில் உள்ள பேரிடா் மேலாண்மை கட்டுப்பாட்டு மையத்தை செவ்வாய்க்கிழமை ஆய்வு செய்த பிறகு, அவா் செய்தியாளா்களுக்கு அளித்த பேட்டி:
கனமழை காரணமாக, புதன்கிழமை (நவ.25) மட்டும் தமிழகம் முழுவதும் பொது விடுமுறை விடப்படுகிறது. அதன்பிறகு மழைப்பொழிவின் அளவைப் பொறுத்து அடுத்தகட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும். கரோனா நோய்த்தொற்று தொடா்பாக அடுத்தகட்ட முடிவுகளை எடுப்பதற்காக வரும் 28-ஆம் தேதி மாவட்ட ஆட்சியா்கள், மருத்துவ நிபுணா்களுடன் தனித்தனியாக ஆலோசனை நடத்தப்படும் என்றாா் முதல்வா் பழனிசாமி.