இந்தியன் வங்கி முன்னாள் தலைவர் கோபால கிருஷ்ணன் மறைவு: தலைவர்கள் இரங்கல்

இந்தியன் வங்கியின் முன்னாள் தலைவரும், யாதவ மகாசபையின் தலைவருமான கோபால கிருஷ்ணன் உடல் நலக் குறைவால் இன்று காலமானார். அவருக்கு வயது 86.


இந்தியன் வங்கியின் முன்னாள் தலைவரும், யாதவ மகாசபையின் தலைவருமான கோபால கிருஷ்ணன் உடல் நலக் குறைவால் இன்று காலமானார். அவருக்கு வயது 86.

சென்னை மயிலாப்பூரில் வசித்து வந்த கோபாலகிருஷ்ணனின் இறுதிச் சடங்குகள் இன்று மாலை பெசன்ட் நகரில் நடைபெறும் என்று அவரது குடும்பத்தினர் அறிவித்திருந்தனர்.

கோபாலகிருஷ்ணன் மறைவுக்கு திமுக தலைவர் மு.க. ஸ்டாலின், பாமக நிறுவனர் ராமதாஸ் உள்ளிட்ட அரசியல் கட்சித் தலைவர்கள் பலரும் தங்களது இரங்கலை தெரிவித்திருந்தனர். மறைந்த கோபாலகிருஷ்ணன் சென்னை மாநகராட்சியின் முதல் மேயர் டாக்டர் ராதாகிருஷ்ணன் பிள்ளையின் மகன் ஆவார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com