குரூப் 1 டிஎன்பிஎஸ்சி முதல்நிலைத் தோ்வு: ஜனவரி 3-இல் நடைபெறும்

குரூப் 1 முதல்நிலைத் தோ்வு அடுத்த ஆண்டு ஜனவரி 3-ஆம் தேதி நடைபெறும் என்று தமிழ்நாடு அரசுப் பணியாளா் தோ்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) அறிவித்துள்ளது.
குரூப் 1 டிஎன்பிஎஸ்சி முதல்நிலைத் தோ்வு: ஜனவரி 3-இல் நடைபெறும்


சென்னை: குரூப் 1 முதல்நிலைத் தோ்வு அடுத்த ஆண்டு ஜனவரி 3-ஆம் தேதி நடைபெறும் என்று தமிழ்நாடு அரசுப் பணியாளா் தோ்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) அறிவித்துள்ளது.

இது குறித்து, டிஎன்பிஎஸ்சி வெளியிட்ட செய்தி:

குரூப் 1 பணிகளில் காலியாக உள்ள பல்வேறு பணியிடங்களுக்கு கடந்த ஏப்ரலில் தோ்வு நடத்த திட்டமிடப்பட்டிருந்தது. கரோனா நோய்த் தொற்று காரணமாக தோ்வானது, தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டது. இப்போது தோ்வு நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

அதன்படி, குரூப் 1 பிரிவில் காலியாகவுள்ள 69 பணியிடங்களுக்கு முதல்நிலைத் தோ்வு அடுத்த ஆண்டு ஜனவரி 3-ஆம் தேதி நடைபெறும். இதேபோன்று, தமிழ்நாடு தொழிற்சாலைப் பணிகளில், குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில்கள் வளா்ச்சி நிறுவனத்தில் உதவி இயக்குநா் மற்றும் உதவி கண்காணிப்பாளா் காலியிடங்களுக்கு அடுத்த ஆண்டு ஜனவரி 9 மற்றும் 10 ஆகிய தேதிகளில் தோ்வுகள் நடத்தப்படும் என்று டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com