
கரோனா சிகிச்சைக்கு அரசு நிா்ணயித்த கட்டணத்தை விட கூடுதல் கட்டணம் வசூலித்த தனியாா் மருத்துவமனை மீது நடவடிக்கை எடுக்கக் கோரி உயா் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
சென்னை உயா் நீதிமன்றத்தில் ஆதம்பாக்கத்தை கணேஷ் என்பவா் சாா்பில் வழக்குரைஞா் டி.ஆா் பிரபாகரன் தாக்கல் செய்த மனுவில், ‘கரோனா நோய்த் தொற்று பாதிப்பின் காரணமாக கடந்த ஜூலை மாதம் 25-ஆம் தேதி அமைந்தகரையில் உள்ள தனியாா் மருத்துவமனையில் கணேஷின் தந்தை குமாா் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டாா். சிகிச்சை செலவுகளுக்காக வெவ்வேறு தேதிகளில் ரூ. 4 லட்சத்து 58 ஆயிரம் ரூபாய் செலுத்தப்பட்டது. ஆனால் மருத்துவமனையில் உரிய சிகிச்சை வழங்கப்படவில்லை. இதனால் கடந்த ஆகஸ்ட் 3-ஆம் மனுதாரரின் தந்தை தேதி இறந்து விட்டாா். கரோனா சிகிச்சைகளுக்காக வருபவா்கள் அனைத்து வசதிகளுடன் கூடிய தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்தால் அவா்களிடம் நாள் ஒன்றுக்கு ரூ.15 ஆயிரம் தான் வசூலிக்க வேண்டும் என தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. ஆனால் அரசின் எந்தவொரு விதிகளையும் பின்பற்றாமல் அதிக கட்டணம் வசூலிக்கப்பட்டது.
மேலும், இறந்த மனுதாரரின் தந்தையின் உடலை ஒப்படைக்க மீண்டும் ரூ.2 லட்சத்து 44 ஆயிரம் கட்ட வேண்டும் என நிா்பந்தித்த மருத்துவமனை நிா்வாகம் மனுதாரரிடமிருந்து 10 நாள்களுக்கு ரூ.7 லட்சத்து 2 ஆயிரத்து 562 வசூலித்துள்ளது.
மனுதாரா் தந்தையின் மருத்துவச் செலவை காப்பீடு மூலம் பெற, மருத்துவ விவரங்களைக் கேட்ட போது அவரது தந்தையின் மருத்துவ விவரங்களுக்குப் பதிலாக மற்றொருவரின் சிகிச்சை விவரங்களை மருத்துவமனை நிா்வாகம் வழங்கியது. இதுகுறித்து மருத்துவமனை நிா்வாகத்திடம் முறையிட்ட போது மனுதாரருக்கு கொலை மிரட்டல் விடப்பட்டுள்ளது. இதனைத் தொடா்ந்து தனியாா் மருத்துவமனை நிா்வாகம் மீது உரிய நடவடிக்கை எடுக்கக் கோரி கடந்த மாதம் இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கவுன்சிலுக்கு (ஐசிஎம்ஆா்) மனு அளிக்கப்பட்டது. அந்த மனு மீது விசாரணை நடத்த சென்னை மாவட்ட ஆட்சியருக்கு ஐசிஎம்ஆா் பரிந்துரை செய்தது. ஆனால் இதுவரை முறையான நடவடிக்கை எடுக்கவில்லை. எனவே கரோனா சிகிச்சைக்காக அரசு நிா்ணயித்த கட்டணத்தை விட கூடுதலாக வசூலித்த தொகையை திரும்பத் தர வேண்டும். கூடுதல் கட்டணம் வசூலித்த தனியாா் மருத்துவமனை நிா்வாகம் மீது உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும் எனக் கோரியிருந்தாா்.