பூம்புகார்: மத்திய அரசு கொண்டுவந்துள்ள தேசிய கல்விக் கொள்கையை ஆதரித்து சீர்காழி கிழக்கு ஒன்றிய பாஜக சார்பில் திருவெண்காடு அருகே மங்கை மடத்தில் கையெழுத்து இயக்கம் ஞாயிற்றுக்கிழமை நடந்தது.
இந்த நிகழ்ச்சிக்கு மாவட்ட கல்வியாளர் பிரிவு தலைவர் ஜெயபிரகாஷ் தலைமை வகித்தார். சீர்காழி கிழக்கு ஒன்றிய தலைவர் அருள்ராஜன் கலந்துகொண்டு கையெழுத்து இயக்கத்தை தொடங்கி வைத்தார்.
இதில் மாவட்ட கலை கலாச்சாரப் பிரிவு தலைவர் வீரமணி, ஒன்றிய பொதுச் செயலாளர் சதீஷ் உள்ளிட்ட பாஜக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.