கம்பம்: தேனி மாவட்டம் கூடலூர் காவல் நிலைய எல்லை பகுதிகளில் உள்ள பொதுமக்களுக்கு குறைதீர்க்கும் முகாம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
தேனி மாவட்டம் கூடலூர் காவல் வட்ட அளவில் தெற்கு , வடக்கு மற்றும் குமுளி காவல் நிலையங்கள் உள்ளன.
இங்கு பொதுமக்கள் அளித்த புகார் மனுக்கள் நிலுவையில் உள்ளது இந்த மனுக்களை உடனடியாக பரிசீலனை செய்ய ஞாயிற்றுக்கிழமை காவல் ஆய்வாளர் முத்துமணி தலைமையில் பொது மக்கள் குறை தீர்க்கும் முகாம் நடைபெற்றது.
முகாமில் குமுளி, லோயர் கேம்ப்,வெட்டுக்காடு, இந்திரா நகர், கூடலூர் பகுதியைச் சேர்ந்த ஆண், பெண் மனுதாரர்கள் கலந்து கொண்டனர்.
புகார் மனுதாரர்களிடம் காவல் ஆய்வாளர் முத்துமணி கூறும்போது நிலுவையில் உள்ள புகார் மனுக்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி கூறினார்.