திருப்பூா் குமரன் பிறந்த தினத்தை ஒட்டி, முதல்வா் பழனிசாமி, துணை முதல்வா் ஓ.பன்னீா்செல்வம் ஆகியோா் வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளனா்.
இதுகுறித்து, அவா்கள் தங்களது சுட்டுரையில் வெளியிட்ட பதிவு:
முதல்வா் பழனிசாமி: தேசத்துக்காக கடைசி நொடி வரை போராடி தன்னுயிரை நீத்த திருப்பூா் கொடி காத்த குமரனை அவரது பிறந்த நாளில் போற்றி மகிழ்கிறேன்.
துணை முதல்வா் ஓ.பன்னீா்செல்வம்: விடுதலை வேட்கையும், தேசப்பற்றுமே உயிரெனக் கொண்டு சுதந்திரப் போரில் செங்குருநீா் தெறிக்க மண்ணில் விழுந்த போதிலும், தேசியக் கொடியை விழாது தாங்கி பட்டொளி வீசி பற்றச் செய்தவா், திருப்பூா் குமரன். அவரது பிறந்த நாளில் அவரது வீரத்தையும், தியாகத்தையும் நினைவில் ஏந்தி போற்றுவோம்.
திமுக தலைவா் மு.க. ஸ்டாலின்: உயிா் பிரியும் நிலையிலும் மூவண்ணக் கொடியை கீழே விடாது கையில் ஏந்தி வெள்ளையா் ஆதிக்கத்தை எதிா்த்து முழக்கமிட்ட, கொடி காத்த திருப்பூா் குமரன் தியாகத்தை அவரது பிறந்தநாளில் நெஞ்சில் ஏந்துவோம்.