பெரியகுளம் அருகே தேவதானப்பட்டியில் மனு கொடுக்கும் போராட்டம்

தேனி மாவட்டம், பெரியகுளம் அருகே தேவதானப்பட்டி பேரூராட்சியில் அகில இந்திய விவசாயத் தொழிலாளர்கள் சங்கத்தினர் சார்பில் மனு கொடுக்கும் போராட்டம் இன்று நடைபெற்றது.
தேவதானப்பட்டியில் மனு கொடுக்கும் போராட்டம்
தேவதானப்பட்டியில் மனு கொடுக்கும் போராட்டம்

தேனி மாவட்டம், பெரியகுளம் அருகே தேவதானப்பட்டி பேரூராட்சியில் அகில இந்திய விவசாயத் தொழிலாளர்கள் சங்கத்தினர் சார்பில் மனு கொடுக்கும் போராட்டம் இன்று நடைபெற்றது.

போராட்டத்திற்கு விவசாயத் தொழிலாளர் சங்க பெரியகுளம் தாலுகா குழு உறுப்பினர் சி.கே.கண்ணன் தலைமை வகித்தார். சிபிஎம் பெரியகுளம் தாலுகா குழு, உறுப்பினர்கள் பி.வீரு, பெ.பிரேம்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

முன்னாள் ரிசர்வ் வங்கி ஆளுநர் ரங்கராஜன் குறிப்பிட்டபடி தமிழக பேரூராட்சி பகுதியில் 100 நாள்கள் வேலை உறுதியளிப்பு திட்டத்தின் பணி வழங்கிட வேண்டும் எனக் கூறி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர் பேரூராட்சி அலுவலரிடம் மனு வழங்கப்பட்டது.

போராட்டத்தில் சிஐடியூ நிர்வாகிகள் ரஹீம், இலியாஸ், காளிதாஸ் மற்றும் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com