அருப்புக்கோட்டையில் அதிமுகவினர் கொண்டாட்டம்

அருப்புக்கோட்டையில் முதல்வர் வேட்பாளராக எடப்பாடி பழனிச்சாமி அறிவிக்கப்பட்டதையொட்டி நகரச் செயலாளர் சக்திவேல் பாண்டியன் தலைமையில் அதிமுகவினர்கொண்டாட்டம். 
அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து, இனிப்புகள் வழங்கிப் பட்டாசுகள் வெடித்துக் கொண்டாடிய நகர அதிமுக செயலாளர் சக்திவேல் பாண்டியன்.
அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து, இனிப்புகள் வழங்கிப் பட்டாசுகள் வெடித்துக் கொண்டாடிய நகர அதிமுக செயலாளர் சக்திவேல் பாண்டியன்.

விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையில் முதல்வர் வேட்பாளராக எடப்பாடி பழனிச்சாமி அறிவிக்கப்பட்டதையொட்டி நகரச் செயலாளர் சக்திவேல் பாண்டியன் தலைமையில் புதன்கிழமை அதிமுகவினர் இனிப்புகள் வழங்கிக் கொண்டாடினர்.

இக்கொண்டாட்டத்திற்கு நகரச் செயலாளர் சக்திவேல் பாண்டியன் தலைமை வகித்தார். முன்னாள் ஒன்றியக்குழுத் தலைவர் யோகா வாசுதேவன் முன்னிலை வகித்தார். அப்போது அருப்புக்கோட்டை அண்னா சிலைக்கு மலர் மாலை அணிவித்து மரியாதை செய்து வணங்கினர். 

பின்னர் பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கியும், பட்டாசுகள் வெடித்தும் அதிமுகவினர் கொண்டாடினர். உடன் கருப்பசாமி, பொதுக்குழு உறுப்பினர் வீர சுப்பிரமணியன் உள்ளிட்ட அதிமுக நிர்வாகிகள் பலரும், திரளான தொண்டர்களும் கொண்டாட்டத்தில் கலந்து கொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com