சட்டமன்றத் தேர்தலில் அதிமுக சார்பில் மீண்டும் முதலமைச்சர் வேட்பாளராக எடப்பாடி பழனிச்சாமி இன்று அறிவிக்கப்பட்டார்.
இதையொட்டி தமிழகம் முழுவதும் அதிமுகவினர் பட்டாசு வெடித்தும் இனிப்பு வழங்கியும் கொண்டாடி வருகின்றனர். ஈரோடு பன்னீர்செல்வம் பார்க் அருகே இன்று அதிமுகவினர் திரண்டு பட்டாசு வெடித்தும் பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கியும் கொண்டாடினர்.
முன்னாள் துணை மேயர் பேசி பழனிச்சாமி, பகுதி செயலாளர்கள் பெரியர்நகர் மனோகரன், கேசவமூர்த்தி சூரம்பட்டி ஜெகதீஷ், ஜெயராஜ் கோவிந்தராஜ் ராமசாமி தங்கமுத்து, முன்னாள் மேயர் மல்லிகா பரமசிவம், பெரியார் நகர் பகுதி அவைத்தலைவர் மீன் ராஜா, ஜெயலலிதா பேரவை மாவட்ட இணைச்செயலாளர் வீரக்குமார், மாணவரணி மாவட்ட இணைச்செயலாளர் நந்தகோபால் மாணவரணி பொருளாளர் முருகானந்தம் உட்பட பலர் கலந்து கொண்டனர்.