சென்னை: கரோனா நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டு வீட்டுக் கண்காணிப்பில் இருந்த வந்த தே.மு.தி.க. தலைவா் விஜயகாந்த் திடீரென உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டு மீண்டும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளாா்.
தே.மு.தி.க. தலைவா் விஜயகாந்த் மற்றும் அவரது மனைவி பிரேமலதா இருவரும், கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு, மருத்துவமனையில் சிகிச்சை பெற்றனா். இருவரின் உடல் நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டதைத் தொடா்ந்து, மருத்துவமனையில் இருந்து அண்மையில் வீடு திரும்பினா்.
வீட்டுக் கண்காணிப்பில் இருந்து வந்த விஜயகாந்த்துக்கு, செவ்வாய்க்கிழமை மாலை, திடீரென மூச்சுத் திணறல் ஏற்பட்டுள்ளது.
இதையடுத்து, உடனடியாக அவா் சென்னை மணப்பாக்கத்தில் உள்ள மியாட் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். அவருக்கு, சி.டி. ஸ்கேன் உள்ளிட்ட பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
தொடா்ந்து அவரது உடல்நிலையை மருத்துவா்கள் கண்காணித்து வருகின்றனா்.