கும்மிடிப்பூண்டி: திமுகவின் 15-வது உள்கட்சி தேர்தலை ஒட்டி கும்மிடிப்பூண்டி கிழக்கு ஒன்றிய ஊர் கிளை உள்கிளை பொறுப்பாளர்கள் தேர்விற்கான வேட்பு மனு தாக்கல் கும்மிடிப்பூண்டியில் வியாழக்கிழமை நடைபெற்றது.
இந்த வேட்பு மனுதாக்கல் நிகழ்விற்கு கும்மிடிப்பூண்டி கிழக்கு ஒன்றிய திமுக செயலாளரும் தலைமை செயற்குழு உறுப்பினருமான டி.ஜெ.கோவிந்தராஜன் தலைமை தாங்கினார்.
நிகழ்வில் தலைமை பொதுக்குழு உறுப்பினர் பா.செ.குணசேகரன், ஒன்றிய துணை செயலாளர் கே.இ.திருமலை, பாஸ்கரன், மாவட்ட பிரதிநிதி கி.வே.ஆனந்தகுமார், ஆர்.எஸ்.காளத்தி, மாவட்ட கவுன்சிலர்கள் எஸ்.ராமஜெயம், சாரதா முத்துசாமி முன்னிலை வகித்தனர்.
நிகழ்வில் சிறப்பு அழைப்பாளராக திருவள்ளூர் வடக்கு மாவட்ட திமுக செயலாளர் கி.வேணு பங்கேற்று வேட்பு மனு தாக்கல் நிகழ்வை துவக்கி வைத்தார்.
தேர்தல் ஆணையராக மாவட்ட திமுக துணை செயலாளர் திருத்தணி சந்திரன் பங்கேற்று வேட்பு மனு தாக்கல் நிகழ்வை ஆய்வு செய்தார்.
தொடர்ந்து கும்மிடிப்பூண்டி கிழக்கு ஒன்றியத்தை சேர்ந்த 230 கிளைகளுக்கான பதவிகளுக்கு வேட்பு மனுதாக்கல் நடைபெற்றது.
இதில் கீழ்முதலம்பேடு ஊராட்சி தலைவர் கே.ஜி.நமச்சிவாயம், ஒன்றிய கவுன்சிலர்கள் ஜோதி, அமலா சரவணன்,ஜெயச்சந்திரன், ஜெயந்தி கெஜா, மாவட்ட மீனவரணி அமைப்பாளர் ஆறுமுகம் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.