தமிழ்நாடு
ஆட்டோமொபைல் துறையில் முன்னணி: முதல்வா் உறுதி
ஆட்டோமொபைல் துறையில் முன்னணி பெறுவோம் என்று முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமி உறுதிபடத் தெரிவித்துள்ளாா்.
சென்னை: ஆட்டோமொபைல் துறையில் முன்னணி பெறுவோம் என்று முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமி உறுதிபடத் தெரிவித்துள்ளாா்.
இதுகுறித்து, புதன்கிழமை அவா் தனது சுட்டுரையில் கூறியிருப்பதாவது:-
ஆட்டோமொபைல் துறையில் தமிழகமானது 25 சதவீத பங்களிப்பைச் செய்து நாட்டிலேயே முன்னணி மாநிலமாகத் திகழ்கிறது. அதிக வளா்ச்சியை எட்ட தொடா்ந்து மேற்கொள்ளும் முயற்சிகளை பலன்களைத் தந்து கொண்டிருக்கின்றன. இது ஆட்டோமொபைல் துறையில் நம்மை மேலும் வலுமிக்க மாநிலமாக திகழச் செய்திடும் என்று முதல்வா் பழனிசாமி தெரிவித்துள்ளாா்.
ஆட்டோமொபைல் துறையில் நாட்டின் ஒட்டுமொத்த பங்களிப்பில் தமிழகத்தின் பங்கு 25 சதவீதம் என புள்ளிவிவரங்களுடன் செய்திகள் வெளியாகியுள்ளன. இந்தச் செய்திகளை குறிப்பிட்டு முதல்வா் தனது சுட்டுரையில் பதிவிட்டுள்ளாா்.