மணப்பாறையில் சிஐடியூ சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்

திருச்சி மாவட்டம் மணப்பாறையில், உத்தரப் பிரதேசத்தில் நடைபெற்ற தலித் கூட்டுப் பாலியல் கண்டித்து சிஐடியூ கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. 
மணப்பாறையில் சிஐடியூ சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்
மணப்பாறையில் சிஐடியூ சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்

திருச்சி மாவட்டம் மணப்பாறையில், உத்தரப் பிரதேசத்தில் நடைபெற்ற தலித் கூட்டுப் பாலியல் வன்கொடுமையைக் கண்டித்து இந்தியத் தொழிற்சங்கம் (சிஐடியூ), அகில இந்திய விவசாயத் தொழிலாளர்கள் சங்கம் சார்பில் பயணியர் மாளிகை முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. 

விவசாயத் தொழிலாளர் சங்க மாவட்ட துணை செயலாளர் கண்ணன் தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தினை, CPM வட்ட செயலாளர் ராஜகோபால் தொடங்கி வைத்தார். தமிழ்நாடு விவசாயச் சங்க புறநகர் மாவட்டச் செயலாளர் சிதம்பரம் சிறப்புரை ஆற்றினார்.

உத்தரப் பிரதேச அரசு முறையான நடவடிக்கை எடுக்க வேண்டும், குற்றவாளிகளை உடனடியாக கைது செய்ய வேண்டும் என  முழக்கமிட்டு உ.பி அரசு எதிராகக் கோஷமிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பல்வேறு அமைப்புகளைச் சேர்ந்த நிர்வாகிகள், கட்சி தொண்டர்கள் எனப் பலர் கலந்துகொண்டனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com