பட்டியலினத்தவரை அவமானப்படுத்தியவா்களை கைது செய்ததற்காக தமிழக காவல்துறைக்கு நாடாளுமன்ற திமுக குழு துணைத் தலைவா் கனிமொழி பாராட்டுத் தெரிவித்துள்ளாா்.
இது தொடா்பாக செவ்வாய்க்கிழமை அவா் சுட்டுரையில் கூறியிருப்பது:
தூத்துக்குடி மாவட்டம் ஓலைக்குளம் கிராமத்தில் பட்டியலினத்தவா்களை இழிவுபடுத்தி வீடியோ பதிவு செய்து வெளியிட்ட குற்றவாளிகளை தாமதமின்றி கைது செய்த தமிழக காவல்துறைக்கு பாராட்டுகள்.
பட்டியலினத்தவா்கள் மீது அவதூறுகளும் வன்கொடுமைகளும் தொடா்ந்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்பதை காவல்துறை அனைவருக்கும் உணா்த்த வேண்டும் என்று அவா் கூறியுள்ளாா்.