குற்றாலநாதர் கோவிலில் ஸ்ரீ நடராஜருக்கு பச்சை சாத்திதாண்டவ தீபாராதனை

தென்காசி மாவட்டம் குற்றாலம் குற்றாலநாதர் கோவில் ஐப்பசி விஷு திருவிழாவில் வியாழக்கிழமையன்று நடராஜ மூர்த்திக்கு பச்சை சாத்திதாண்டவ தீபாராதனை நடைபெற்றது. 
நடராஜருக்கு நடைபெற்ற பச்சை சாத்திதாண்டவ தீபாராதனை
நடராஜருக்கு நடைபெற்ற பச்சை சாத்திதாண்டவ தீபாராதனை

தென்காசி: தென்காசி மாவட்டம் குற்றாலம் குற்றாலநாதர் கோவில் ஐப்பசி விஷு திருவிழாவில் வியாழக்கிழமையன்று நடராஜ மூர்த்திக்கு பச்சை சாத்திதாண்டவ தீபாராதனை நடைபெற்றது. 

குற்றாலநாதர் கோவிலில் ஐப்பசி விசுத் திருவிழா கடந்த 8 ஆம் தேதியன்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவில் 4 மற்றும் 11 ஆம் தேதியன்று பஞ்சமூர்த்திகள் புறப்பாடு நிகழ்ச்சியும் 14 ஆம் தேதியன்று நடராஜருக்கு காலை 9.30 மணிக்கும், இரவு 7 மணிக்கும் தாண்டவ தீபாராதனை நடைபெற்றது. 

வியாழக்கிழமை நடராஜருக்கு பச்சை சாத்திதாண்டவ தீபாராதனை நடைபெற்றது.17 ஆம் தேதி காலை 10 மணிக்கு விசு தீர்த்தவாரி நடைபெறுகிறது. கரோனா காலம் என்பதால் விழாக்கள் அனைத்தும் குற்றாலநாதர் கோவில் உள்பிரகாரத்திலேயே நடைபெறுகிறது. விழாவுக்கான ஏற்பாடுகளை கோவில் உதவி ஆணையர் மா.கண்ணதாசன் தலைமையில் பணியாளர்கள் செய்திருந்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com