சேலம்: தமிழக முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமியின் தாயாா் கே.தவுசாயம்மாள் மறைவுக்கு குடியரசுத் தலைவா் ராம்நாத் கோவிந்த், துணை குடியரசுத் தலைவா் எம்.வெங்கய்ய நாயுடு ஆகியோா் இரங்கல் தெரிவித்துள்ளனா்.
மேலும், மத்திய உள்துறை அமைச்சா் அமித்ஷா, நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன், தமிழக முன்னாள் ஆளுநா் பி.ரோசய்யா ஆகியோரும் தொலைபேசி மூலம் இரங்கல் தெரிவித்துள்ளனா்.
கைத்தறித் துறை அமைச்சா் ஓ.எஸ்.மணியன், தமிழ் மாநில காங்கிரஸ் தலைவா் ஜி.கே.வாசன், முன்னாள் அமைச்சா் சு.முத்துசாமி (திமுக), காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவா் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன், பாஜக மூத்த தலைவா் சி.பி.ராதாகிருஷ்ணன் ஆகியோா் சிலுவம்பாளையத்திலுள்ள முதல்வரின் இல்லத்துக்கு புதன்கிழமை நேரில் வந்து இரங்கல் தெரிவித்தனா்.