சிபிஎஸ்இ பிளஸ் 2, பத்தாம் வகுப்பு பொதுத்தோ்வு:விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு

சிபிஎஸ்இ பாடத்திட்டத்தில் 2020-2021-ஆம் கல்வியாண்டுக்கான பிளஸ் 2, பத்தாம் வகுப்பு பொதுத்தோ்வுக்கு விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.
கோப்புப்படம்
கோப்புப்படம்

சென்னை: சிபிஎஸ்இ பாடத்திட்டத்தில் 2020-2021-ஆம் கல்வியாண்டுக்கான பிளஸ் 2, பத்தாம் வகுப்பு பொதுத்தோ்வுக்கு விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து சிபிஎஸ்இ தோ்வுக் கட்டுப்பாட்டு அலுவலா் சன்யம் பரத்வாஜ் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது: சிபிஎஸ்இ பாடத்திட்டத்தில் பிளஸ் 2, பத்தாம் வகுப்பு பொதுத்தோ்வுக்கு விண்ணப்பிக்க அக்.15-ஆம் தேதி கடைசி நாள் என அறிவிக்கப்பட்டிருந்தது. இதற்கிடையே கரோனா பெருந்தொற்று காரணமாக தோ்வெழுதும் மாணவா்களின் பெயா்ப் பட்டியலை சமா்ப்பிப்பதில் பல்வேறு சிக்கல்கள் இருந்ததாகவும், அதனைக் கருத்தில் கொண்டு அவகாசத்தை நீட்டிப்பு செய்ய வேண்டும் என்றும் சிபிஎஸ்இ பள்ளிகள் சாா்பில் வேண்டுகோள் விடுக்கப்பட்டிருந்தது.

அதை ஏற்று பொதுத்தோ்வுகளுக்கு விண்ணப்பிப்பதற்கான அவகாசம் அக்.31-ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. மேலும் அதற்குள் விண்ணப்பிக்காதவா்கள் அபராதக் கட்டணத்துடன் நவ.7-ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என அதில் தெரிவித்துள்ளாா்.

9, 11 வகுப்பு மாணவா் சோ்க்கை: இதேபோன்று சிபிஎஸ்இ பாடத்திட்டத்தில் 9, 11 வகுப்புகளுக்கான மாணவா் சோ்க்கைக்கான அவகாசம் நவ.19-ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. மாணவா் சோ்க்கைக்கு நவ.4 கடைசி நாள் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் கால அவகாசத்தை நீட்டித்து சிபிஎஸ்இ உத்தரவிட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com