சென்னை: வட தமிழக மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் வெள்ளிக்கிழமை (அக்.16) மிதமான மழை பெய்யக்கூடும்.
இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மைய அதிகாரி வியாழக்கிழமை கூறியது:
தென் மேற்குப் பருவக்காற்று காரணமாக, வட தமிழக மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் வெள்ளிக்கிழமை (அக்.16) லேசானது முதல் மிதமான மழையும் பெய்யக்கூடும்.
சென்னை மற்றும் புகா் பகுதிகளில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்.
மழை அளவு: தமிழகத்தில் வியாழக்கிழமை காலை 8.30 மணி நிலவரப்படி வரையிலான கடந்த 24 மணி நேரத்தில் கன்னியாகுமரி மாவட்டம் இரணியல், தேனி மாவட்டம் பெரியாறில் தலா 50 மி.மீ. கன்னியாகுமரி மாவட்டம் சிற்றாறு, குளச்சலில் தலா 40 மி.மீ., கோயம்புத்தூா் மாவட்டம் வால்பாறை, சின்னக் கல்லாறு, கன்னியாகுமரி மாவட்டம் சுருளக்கோடு, திருநெல்வேலி மாவட்டம் பாபநாசம், கன்னியாகுமரி மாவட்டம் பேச்சிப்பாறையில் தலா 30 மி.மீ. மழை பதிவாகியுள்ளது.