சென்னை: வீரத்திற்கு இலக்கணமாய் விளங்கும் வீரபாண்டிய கட்டபொம்மனை வணங்கி அவர்தம் நினைவு நாளில் வணங்கி நினைவு கூர்கிறேன் என்று முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி கூறியுள்ளார்.
"ஆங்கிலேயரின் அடக்கு முறையை எதிர்த்து என் நாட்டில் விளையும் பொருட்களுக்கு வரி செலுத்த முடியாது" என்ற நிலைப்பாட்டில் உறுதியாய், தூக்கு மேடை ஏறியபோதும் தூக்கு கயிற்றை முத்தமிட்டு மாவீரனான வீரபாண்டிய கட்டபொம்மனின் நினைவு நாள் இன்று.
இந்நிலையில், முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி சுட்டுரை பக்க பதிவில், "ஆங்கிலேயரின் அடக்கு முறையை எதிர்த்து என் நாட்டில் விளையும் பொருட்களுக்கு வரி செலுத்த முடியாது" என்ற நிலைப்பாட்டில் உறுதியாய், தூக்கு மேடை ஏறியபோதும் தூக்கு கயிற்றை முத்தமிட்டு,வீரத்திற்கு இலக்கணமாய் விளங்கும் வீரபாண்டிய கட்டபொம்மனை அவர்தம் நினைவு நாளில் வணங்கி நினைவு கூர்கிறேன் என கூறியுள்ளார்.