கலவையில் இந்திய குடியரசு கட்சியினர் ஆர்ப்பாட்டம்

ராணிப்பேட்டை மாவட்ட ம் கலவை பேருந்து நிலையத்தில், உத்தரபிரதேச மாநில அரசையும், மத்திய அரசு கொண்டு வந்துள்ள விவசாய மசோதாவை திரும்பப் பெற கோரியும் ஆர்ப்பாட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
கலவையில் இந்திய குடியரசு கட்சியினர் ஆர்ப்பாட்டம்


ராணிப்பேட்டை மாவட்டம் கலவை பேருந்து நிலையத்தில், உத்தரபிரதேச மாநில அரசையும், மத்திய அரசு கொண்டு வந்துள்ள விவசாய மசோதாவை திரும்பப் பெற கோரியும் ஆர்ப்பாட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

ஆர்ப்பாட்டத்திற்கு கட்சியின் முன்னாள் மாநில விவசாய அணி செயலாளர் பிஎம் செல்வராஜ் தலைமை வகித்தார்,  சிறப்பு அழைப்பாளராக மாநில பொதுச்செயலாளர் அனந்தலை மு தங்கராஜ் கலந்துகொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினார். 

இதில், மாவட்ட தலைவர் சிவக்குமார், மாவட்ட செயலாளர் க.தமிழ்குசேலன், மாநில அமைப்புச் செயலாளர் பி தன்ராஜ், மாநில குழு உறுப்பினர் சம்பத்குமார், மாவட்ட துணை செயலாளர் ரூபன், கலவை நகரத் தலைவர் ஜெயராமன்உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

முடிவில் திமிரி ஒன்றிய செயலாளர் பாடகர் சத்தியா நன்றி கூறினார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com