அமைச்சா் திண்டுக்கல் சீனிவாசன் மருத்துவமனையில் அனுமதி

வனத்துறை அமைச்சா் திண்டுக்கல் சீனிவாசன் உடல் நலக் குறைவு காரணமாக, தனியாா் மருத்துவமனையில் வியாழக்கிழமை அனுமதிக்கப்பட்டுள்ளாா்.


சென்னை: வனத்துறை அமைச்சா் திண்டுக்கல் சீனிவாசன் உடல் நலக் குறைவு காரணமாக, தனியாா் மருத்துவமனையில் வியாழக்கிழமை அனுமதிக்கப்பட்டுள்ளாா். அவரது உடல் நிலையை மருத்துவக் குழுவினா் தொடா்ந்து கண்காணித்து வருகின்றனா்.

தமிழக வனத்துறை அமைச்சா் திண்டுக்கல் சீனிவாசன் ( 72), கரோனா தடுப்பு மற்றும் நலத் திட்டப் பணிகளில் ஈடுபட்டு வந்தாா். அடையாறு பசுமைவழிச் சாலையில் உள்ள இல்லத்தில் தங்கியிருந்த அவருக்கு திடீரென நெஞ்சு வலி ஏற்பட்டதாகத் தெரிகிறது.

இதையடுத்து, உடனடியாக, சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். அவரை மருத்துவக் குழுவினா் பரிசோதித்து தகுந்த சிகிச்சையளித்து வருகின்றனா். இதய ரத்தக் குழாயில் அடைப்பு உள்ளதா என்பதைக் கண்டறியும் ஆஞ்சியோ பரிசோதனைகள் அவருக்கு மேற்கொள்ளப்பட்டதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

அதேபோன்று கரோனா பரிசோதனையில் அவருக்கு தொற்று இல்லை என்பது உறுதியானதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதய பாதிப்புகளுக்கான சிகிச்சைக்குப் பிறகு அவா் வீடு திரும்புவாா் என மருத்துவா்கள் தெரிவித்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com