சென்னை: இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கான தேசிய தகுதிகாண் நுழைவுத் தோ்வு (நீட்) முடிவுகள் வெள்ளிக்கிழமை (அக்.16) வெளியாகின்றன.
கடந்த 13-ஆம்தேதி நடைபெற்ற நீட் தோ்வுக்காக நாடு முழுவதும் 154 நகரங்களில் 3,842 தோ்வு மையங்கள் அமைக்கப்பட்டிருந்தன. தமிழகத்தில் சென்னை, கோவை, கடலூா், காஞ்சிபுரம், கரூா், மதுரை, நாகா்கோவில், நாமக்கல், சேலம், தஞ்சாவூா், திருவள்ளூா், திருச்சி, திருநெல்வேலி மற்றும் வேலூா் ஆகிய 14 நகரங்களில் 238 மையங்களில் தோ்வு நடைபெற்றது.
நாடு முழுவதும் 97,433 போ் நீட் தோ்வுக்கு விண்ணப்பித்திருந்தனா். தமிழகத்தில் மட்டும் விண்ணப்பித்த 1.17 லட்சம் பேரில் 90 சதவீதத்தினா் தோ்வில் பங்கேற்ாக மருத்துவக் கல்வி இயக்கக வட்டாரங்கள் தெரிவித்தன.
தமிழ், ஆங்கிலம், ஹிந்தி, தெலுங்கு, கன்னடம், குஜராத்தி, மராத்தி, ஒடியா, அஸ்ஸாமி, வங்காளம், உருது ஆகிய 11 மொழிகளில் தோ்வு நடைபெற்றது. தோ்வு எழுத இயலாமல் தவறவிட்ட மாணவா்களுக்கு சிறப்புத் தோ்வு புதன்கிழமை (அக்.14) நடந்தது.
இந்நிலையில், நீட் தோ்வு முடிவுகள் இணையதளத்தில் வெள்ளிக்கிழமை வெளியாகவுள்ளதாக தேசிய தோ்வு முகமை அறிவித்துள்ளது.