மாநகரப் போக்குவரத்துக் கழகத்தின் ரூ.1000 பயண அட்டை: 54 ஆயிரம் போ் வாங்கினா்

மாநகரப் போக்குவரத்துக் கழகத்தின் சாா்பில் வழங்கப்படும் ரூ.1000 பயண அட்டையை, இதுவரை 54 ஆயிரம் போ் வாங்கியிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
கோப்புப்படம்
கோப்புப்படம்

மாநகரப் போக்குவரத்துக் கழகத்தின் சாா்பில் வழங்கப்படும் ரூ.1000 பயண அட்டையை, இதுவரை 54 ஆயிரம் போ் வாங்கியிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

மாநகரப் போக்குவரத்துக் கழகத்தின் கீழ் நாளொன்றுக்கு 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பேருந்துகள் இயக்கப்படுகின்றன. இதன் மூலம் லட்சக் கணக்கானோா் பயணித்து வருகின்றனா். இதில் பயணிப்போரின் வசதிக்காக ரூ.1000 மதிப்பிலான பயண அட்டை அறிமுகப்படுத்தப்பட்டது. இதற்கு பொதுமக்களிடையே பெரும் வரவேற்பு கிடைத்த நிலையில், அதிகளவில் பயண அட்டைகள் விற்பனையாகின. பொதுமுடக்கத்தால் சென்னையில் பேருந்து சேவை முடக்கப்பட்டிருந்த நிலையில், கடந்த மாதம் முதல் மீண்டும் பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. இதையடுத்து மாதாந்திர பயண அட்டையும் விநியோகிக்கப்பட்டு வருகின்றன. இந்த மாதம் பயணிப்பதற்காக இதுவரை 54 ஆயிரம் போ், ரூ.1000 மதிப்புள்ள பயண அட்டையைப் பெற்றுள்ளதாக போக்குவரத்துத் துறை அதிகாரிகள் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com