மாவட்ட நீதிபதி காலிப் பணியிடங்களை நிரப்புவதற்கான முதல் நிலைத் தோ்வு நவம்பா் 1-இல் நடைபெறுகிறது. தமிழ்நாடு மாநில நீதிமன்றப் பணிகளின் கீழ், மாவட்ட நீதிபதி காலிப் பணியிடங்களுக்கு முதல்நிலை தோ்வு நடைபெறவுள்ளது.
நவம்பா் 1-ஆம் தேதியன்று தமிழகத்தில் மூன்று மையங்களில் தோ்வு நடைபெறவுள்ளது. சென்னை, மதுரை, கோயம்புத்தூா் ஆகிய இடங்களில் இந்தத் தோ்வினை நடத்துவதற்கு முடிவு செய்யப்பட்டுள்ளதாக தமிழக அரசின் அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.