அதிமுக அரசில் ஊழல் என எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் பேசுவது சாத்தான் வேதம் ஓதுவது போல் உள்ளதாக அமைச்சர் செல்லூர் ராஜு தெரிவித்துள்ளார்.
மதுரையில் அதிமுகவின் 49- ஆம் ஆண்டு தொடக்க விழா நிகழ்ச்சியில் பங்கேற்ற பின் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த தமிழக கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜு,
நீட் தேர்வில் இட ஒதுக்கீடு வேண்டும் என்பதில் அதிமுக அரசு உறுதியாக இருக்கிறது. 2021 சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுகவுக்கு போட்டி திமுக மட்டுமே. கண்ணுக்கெட்டிய தூரம் வரை வேறு எதிரிகளே இல்லை.
அதிமுக அரசில் ஊழல் என எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் பேசுவது சாத்தான் வேதம் ஓதுவது போல் உள்ளது. நாங்கள் சொந்தக்காலில் நிற்க விரும்புகிறோம். பிறர் காலை நம்பி நிற்கவில்லை.
சொத்துக்குவிப்பு வழக்கில் திமுகவின் பொன்முடி மகன் மட்டுமில்லாமல் பலர் சிக்கியுள்ளனர். கொள்ளையடிப்பதில் தனிக்கலை கொண்ட திமுகவினர் விஞ்ஞான ரீதியாக கொள்ளையடித்துள்ளனர்.
தமிழகத்தில் இருண்ட ஆட்சி என்று திமுக தலைவர் ஸ்டாலின் கூறுகிறார். ஆனால், தமிழகத்தில் தடையில்லா மின்சாரத்தை அதிமுக அரசு தான் வழங்குகிறது. ஸ்டாலின் வீட்டிற்கு 100 யூனிட் இலவச மின்சாரத்தை அதிமுக அரசு தான் வழங்குகிறது என்றார்.