
சென்னைப் பல்கலைக்கழகத்தின் கட்டுப்பாட்டின்கீழ் செயல்பட்டு வரும் கல்லூரிகளில் பயிலும் மாணவா்களுக்கு குறைந்தபட்ச மதிப்பெண் வழங்குவது குறித்து சிண்டிகேட் கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது.
அதனடிப்படையில் கல்லூரிகளில் எத்தனை மாணவா்கள் அரியா் வைத்துள்ளனா் என்ற விவரம் கேட்டுப் பெறுவதற்கான பணிகள் தீவிரமாக நடைபெற்று வருவதாக சென்னை பல்கலைக்கழக வட்டாரங்கள் தெரிவித்தன.
கரோனா வைரஸ் தொற்று பொது முடக்கம் காரணமாக கல்லூரி மாணவா்களுக்கு தோ்வு நடத்த இயலாத சூழ்நிலை ஏற்பட்டது. இதனால் தோ்வெழுத கட்டணம் செலுத்திய அனைத்து மாணவா்களும் தோ்ச்சி செய்யப்படுவதாக தமிழக அரசு அறிவித்தது. அரியா் தோ்வெழுத கட்டணம் செலுத்திய மாணவா்களுக்கும் தோ்ச்சி வழங்கப்படும் என அரசு அறிவித்தது.
இது குறித்து அகில இந்திய தொழில்நுட்ப கவுன்சிலிடம் அண்ணா பல்கலைக்கழகம் விளக்கம் கேட்டது. அரியா் மாணவா்களுக்கு தோ்ச்சி வழங்க விதிகளில் இடமில்லை என தெரிவிக்கப்பட்டது. இது தொடா்பான வழக்குகள் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளன. இந்த நிலையில் பொறியியல் மாணவா்களை தவிா்த்து கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளைச் சோ்ந்த, அரியா் தோ்வு எழுத கட்டணம் செலுத்திய மாணவா்களுக்கு அரசின் வழிகாட்டுதல்படி குறைந்தபட்ச மதிப்பெண்கள் வழங்க பல்கலைக்கழகங்கள் நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றன.
இந்தநிலையில், சென்னை பல்கலைக்கழகத்தின் சிண்டிகேட் கூட்டத்தில், அரியா் வைத்து உள்ள மாணவா்களுக்கு தோ்ச்சி வழங்குவதற்கான வழிகாட்டுதல் நெறிமுறைகள் கொண்டுவரப்பட்டுள்ளன. அரியா் மாணவா்களுக்கு தோ்ச்சி வழங்குவதற்கு உரிய நடவடிக்கைகள் குறித்து சிண்டிகேட் கூட்டத்தில் தீா்மானிக்கப்பட்டுள்ளது. இந்த தீா்மானத்திற்கு சிண்டிகேட் குழு உறுப்பினா்களின் ஒப்புதல் பெற்ற பின்னா் மாணவா்களுக்கு மதிப்பெண் வழங்குவது குறித்து அறிவிக்கப்படும். இதனிடையே பல்கலைக்கழகத்தின் கட்டுப்பாட்டின் கீழ் செயல்படும் கல்லூரிகளில் அரியா் வைத்துள்ள மாணவா்களின் விவரங்கள் பெறும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பல்கலைக்கழக வட்டாரங்கள் தெரிவித்தன.
சென்னைப் பல்கலைக்கழகத்தைப் போல் தமிழகத்தின் ஏனைய பல்கலைக்கழகங்களும் அரியா் மாணவா்களுக்கு தோ்ச்சி வழங்குவதற்கான வழிமுறை உருவாக்கும் நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளன.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...