திருச்சியில், தீயணைப்பு மற்றும் மீட்புத்துறை சார்பில், கரோனா விழிப்புணர்வு மராத்தான் இன்று நடைபெற்றது.
திருச்சி, கன்டோன்மென்ட் தீயணைப்பு நிலையத்திலிருந்து இருந்து, மூத்த தீயணைப்பு வீரர் சகாயராஜ், மராத்தான் விழிப்புணர்வு ஓட்டத்தைக் கொடியசைத்துத் தொடங்கி வைத்தார்.
இந்த மாரத்தான் ஓட்டம் பீமநகர், பாரதி தாசன் சாலை, தலைமை அஞ்சலகம் வழியாக டிவிஎஸ் டோல்கேட் வழியாக அண்ணா விளையாட்டரங்கம் வரை நடைபெற்றது. இதில் தீயணைப்புத் துறை சார்ந்த வீரர்கள், தன்னார்வ இளைஞர்கள் உள்ளிட்டோர் ஆர்வத்துடன் பங்கேற்றனர்.
சமூக இடைவெளி, முகக்கவசம், கையுறைகள் அணிவது, கைகளை அடிக்கடி சோப்பு, திரவங்கள், கிருமி நாசினிகள் மூலம் சுத்தம் செய்வது உள்ளிட்ட விழிப்புணர்வுகளை வலியுறுத்தும் வகையில்,
மாரத்தான் ஓட்டத்தின் போது வீரர்கள் கையில் விழிப்புணர்வு பதாகைகளை ஏந்திச் சென்றனர். மேலும், கரோனா வைரஸ் குறித்த விழிப்புணர்வு துண்டுப் பிரசுரங்களும் வழங்கப்பட்டது.
நிகழ்வில், தீயணைப்பு மற்றும் மீட்புத் துறை மாவட்ட உதவி அலுவலர் கருணாகரன் , நிலைய அலுவலர் மெல்கி ராஜா உள்ளிட்ட பலரும் பங்கேற்றனர்.