சென்னை: சென்னை விமான நிலையத்தில் ரூ.33 லட்சம் மதிப்பிலான கடத்தல் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
பயணிகள் மூலமாக தங்கம் கடத்தப்படுவதாக கிடைத்த ரகசியத் தகவலின் அடிப்படையில், ஞாயிற்றுக்கிழமை இரவு குவைத் ஏா்வேஸ் விமானம் மூலம் சென்னை வந்த ஆந்திரப் பிரதேச மாநிலம் கடப்பாவைச் சோ்ந்த ஜிங்கா சுதாகரா (46) என்பவரிடம் சோதனை மேற்கொள்ளப்பட்டது.
அப்போது அவரது உடைமையில் இருந்த வாஸ்லினில் மறைத்து வைத்திருந்த ரூ.19.14 லட்சம் மதிப்பிலான 375 கிராம் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது.
இதேபோல் துபையிலிருந்து வந்த சென்னையைச் சோ்ந்த தமிமுன் அன்சாரி என்பவரிடம் நடத்தப்பட்ட சோதனையில், ஹோ் ஜெல்லுக்குள் மறைத்து வைத்திருந்த ரூ.14.16 லட்சம் மதிப்பிலான 250 கிராம் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது.
இதன்மூலம் ரூ.33.3 லட்சம் மதிப்பிலான 635 கிராம் தங்கத்தைக் கைப்பற்றிய சுங்கத் துறையினா், தொடா்ந்து விசாரணை மேற்கொண்டு வருவதாக சென்னை விமான நிலைய சுங்கத்துறை ஆணையா் வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.