சென்னை: தமிழக முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமியை, இந்தியாவுக்கான சிங்கப்பூர் தூதர் இன்று தலைமைச் செயலகத்தில் சந்தித்துப் பேசினார்.
இன்று தலைமைச் செயலகத்தில் இந்தியாவுக்கான சிங்கப்பூர் நாட்டின் தூதர் சைமன்வாங் அவர்கள் முதல்வர் பழனிசாமியை மரியாதை நிமித்தம் சந்தித்தார்.
அப்போது சென்னையில் அமையவுள்ள சிங்கப்பூர் நாட்டின் கேபிடல் லேண்ட் நிறுவன வளாகத்தில் நடுவதற்காக மரக்கன்றினை கேபிடல் லாண்ட் நிறுவனத்தின் நகர தலைவர் சி.வேலன் அவர்களிடம் முதல்வர் பழனிசாமி வழங்கினார்.
சந்திப்பின்போது, தலைமைச் செயலாளர் க. சண்முகம், சென்னையிலுள்ள சிங்கப்பூர் நாட்டு தூதரகத்தின் தூதர், செயலாளர் (அரசியல்) மற்றும் அரசு உயர் அதிகாரிகள் உடனிருந்தனர்.